Friday, September 14, 2007

நெகட்டிவ்

வெகு நாட்களுக்கு பிறகு
ஊருக்கு வந்த என்னிடம்
வெறு கண்ணசைவுகளோடு
நிறுத்திக்கொண்டாய்
என்னோடு பேச விரும்பியதை ...
நம்மிடமிருந்து நம்மை
விலகச்செய்தது
உன் அக்கா உனக்காக
கொடுத்துவிட்டுப்போன
சுருக்கம் நிறைந்த தாவணி...
என் அருகில் வாராமல்
உன்னைதடுத்தது
உன் பருவ வளர்ச்சி...
ஊரிலிருந்து புறப்பட்டு
வெகுநாட்களாகியும்
உன்னை இழந்துவிட்ட
பரிதவிப்பிலிருந்து மீளமுடியவில்லை ..
எனினும்
நீ மேய்த்துக்கொண்டிருந்த
ஆடுகளோடு சேர்த்து
எடுத்துக்கொண்ட
புகைப்பட நெகட்டிவ்
என்னிடம் இருக்கிறது
பத்திரமாக.....
வீரமணி

No comments: