Monday, September 10, 2007

மரணம் பற்றிய பகிர்தல்கள்











மருத்துவமனைகளின்
மயக்க வாடையை
நுகர்ந்ததுண்டா

பேறுகாலத்தில்
புள்ளை பெத்துக்கொள்ள
மனைவியை அழைத்துக்கொண்டு
மருத்துவமனை வாசல்களில்
நடுராத்தியில் நின்றதுண்டா

நோயாளிகளை அழைத்து வரும்
ஆம்புலன்ஸ் அலறலில்
உயிர் அதிர்வை உணர்ந்ததுண்டா

அய்...சி..யூ வார்டில் ஆரம்பித்து
சி...சி...யூ வார்டு வரை
அலைந்ததுண்டா

ஆக்சிடண்ட்டில்
உயிர் சிந்த அட்மிட் ஆகும்
அரைப்பிணங்களின்
கடைசி நிமிடங்களின்
முனகல் சத்தம் சந்தித்துண்டா

மார்ச்சுவாரி வாசலில் காத்திருந்து
உறவினர் அல்லது நண்பனின்
பிரேதம் வாங்கியதுண்டா....

அதிமுக்கியமாக
அனைத்தும் முடிந்து
கேஷ் கவுண்டரில்
சொத்தைவித்து பணம் கட்டியதுண்டா.....

அறுத்துக்கொடுத்த பிணத்தை
சொந்த ஊருக்கு எடுத்து சென்று
அடக்கம் செய்தபோது
கண்ணு மூளையெல்லாம்
அறுத்த மிச்சத்தைதான் கொடுத்தாங்களாம்
என்ற சொல்லை
காதில் வாங்கி
துடித்ததுண்டா....
மரணத்தை பற்றி வேறு என்ன பகிர....

1 comment:

வெங்கட்ராமன் said...

மரணம் பற்றிய பயம் வருகிறது நண்பரே இதைப் படிக்கும் போது.