Monday, September 10, 2007

கசக்கும் சக்கரை




















அம்மா உங்களை
பெத்து வளர்த்த மாதரிதான்
நானும் இந்த கரும்பை
வளற்கிறேன் என்பார் அப்பா..

விதை புள்ளுப் போட்டதிலிருந்து
கரும்பு வெட்டி அனுப்பிய வரைக்கும்
அவர் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது....
என்றாலும் கஷ்டப்பட்டாதாம்
கிடைக்குமென சொல்லிவிட்டு ஓடுவார்
ஒவ்வொரு ராத்திரியும் பகலும்,,,

வெட்டி அனுப்பிவிட்டு
காசுக்கு நடையாய்
நடக்கும்போதுதான் சொன்னார்
இப்படியொரு விவசாயம் பண்றதவிட
எவனுக்காவது செரச்சிவுட்டு சம்பாதிக்கலாம் என..............
எனக்கு முடி வெட்டிவிடும்
புத்தூர்பாண்டியன் சொன்னார்
என்னா தம்பி பொழப்பு இது
உங்க அப்பாவாட்டம் விவசாயம் பார்த்தாலாவது
நாலு காச கையிலப்பார்க்காலம் என்று....

No comments: