Saturday, September 15, 2007

சு.கீணனூர்





தூரத்து கரம்பில்
மேயும் ஆடு மாடுகள்,

நெல்லறுத்த வயல்க்காட்டில்
தப்பு கருது பொறுக்கும்
முக்காட்டுத்தலைகள்,


மெனைமெனையாய்
கட்டுத்தூக்கும்
மஞ்சள் தலை மனிதர்கள்,

சொனையை
காறித்துப்பியப்படி
நெல் கருதை
உதறி விடும்
வளையல் கைகள்,

ரோட்டோரமாய்
அடுக்கியிருக்கும்
கரும்பு கத்தைகளை
லாரியில் ஏற்றிக்கொண்டிருக்கும்
கரும்பு வெட்டு ஆட்கள்,

திட்டுதிட்டுயாய்
ஈரமுக்காட்டுடன்
ஆஞ்சி ஆஞ்சிக்குள்ளப்புட்டிகளை
நிரப்பும் மல்லாட்டை ஆசைகள்,

வெட்ட வெட்ட நீளும்
எலி வலைகளில்
வெட்டிப்பிடித்து
வறுபடும் சாராயாத்துக்கு
வெள்ளை எலிகள்,

என இன்னும் பிற
அடையாளங்களை மீறி
மழை நாட்களில்
நான்கு பக்கமும்
வெள்ளம் சூழ
"குட்டி இலங்கையாய்"
தத்தளிக்கும்
நான் பிறந்து
வளர்ந்து, வாழும்

என் கீணனூர் .

வீரமணி

1 comment:

வெங்கட்ராமன் said...

கவிதை அருமை நண்பரே.