Sunday, September 09, 2007

இடிஞ்ச கோயிலும்,, கிழிஞ்ச மேளமும்




"பல்ப குச்சிக்கு கோவைதழை"
"பல்ப குச்சிக்கு கோவைதழை"

என கூவி கூவி கோவைதழை விற்று
உனக்கு பல்பம் வாங்கி கொடுத்தது.....

எல்ந்த பழத்தைவிட உனக்கு
காரப்பழந்தான் பிடிக்கும் என்பதற்காக

காரைப்புதரில் பறித்து
ஜாம்ண்டரி பாக்சில் நிரப்பி கொடுத்தது

மைசூர் பாக்கைவிட
அச்சு வெல்லம் பிடிக்குமென
வாய்க்கா மேட்டில்
புளியம் பழம் பறித்து
செட்டியார் கடையில்
அச்சு வெல்லம் வாங்கிகொடுத்தது

முதல் மார்க் வாங்கதான்
பிடிக்குமென்று நீ சொல்லிவிட
உனக்காக இரண்டாவது மார்க் வாங்கியது

என எல்லாவற்றையும் மறந்து
என்னைவிட வீட்டில் பார்த்த மாப்பிளைதான்
பிடிச்சிருக்கென்று சொல்லிவிட்டு
கல்யாணம் கட்டிகொண்டு
நீ போனபோதுதான் தாங்கமுடியவில்லை

போடி...போ......

போகிற இடத்திலாவது
உண்மையா இரு...
இந்த இடிஞ்ச கோயிலுக்கு
ஒரு கிழிஞ்ச மேளம்
கிடைக்காமலா போயிடும்.....

வீரமணி

1 comment:

சிவபாலன் said...

// இந்த இடிஞ்ச கோயிலுக்கு
ஒரு கிழிஞ்ச மேளம்
கிடைக்காமலா போயிடும்..... //

அது..!

சூப்பர்..