Friday, September 07, 2007

பிஞ்சு காதல்




உயிர் அதிரும் பயணம்
ரயில் பாதை அருகே
வழ்ந்து கொண்டிருக்கிறேன்..

அதிர்ந்து பின் நிகழும்
மெளன சாம்ராஜ்யத்தில்
வெந்து புழங்கும்
உன் நினைவில் என் தனிமை

உன் பிஞ்சு விரல்களால்
கவிதை கிளறி
குளிர் காய்கிறது
என் காமம் .

தண்டவாளமோர
ஒற்றைபனை மரத்தில்
கிளிகள் வாழும் பொந்துக்குள்
இரைதேடும் என் பார்வைகள்.

என் ஞாபகமின்றி
ஏதாவது ஒரு கரம்பு வெளியில்
ஆடு மேய்த்துக்கொண்டிருக்கலாம்
உன் சகத்தோழிகளோடு...

வீரமணி

1 comment: