Saturday, August 26, 2006

ஒயின் ஷாப் கவிதை

எச்சில் பண்டங்கள் சிதறிகிடக்கும்
ஒயின்ஷப் பாரில்
எப்பொழுதாவது நடக்கும்
நண்பர்களின் மது விருந்து

சைடிஷ்களை பரப்பிவைத்து
அளவு சரியாக ஊற்றுவான் அதிலொருவன்
முதல் சுற்றில் மட்டும்

மிக்சர்,பொடிமாஸ்,சில்லிசிக்கன் என
எத்தனை பெரிய அயிட்டங்கள் இருந்தாலும்
ஊறுக்காயிக்கு இணை எதுவுமில்லை

ஆஃப் போதுமென ஆரம்பித்து
ரெண்டு ஃபுல்லை தாண்டியிருப்போம்
இரவு 12 மணிக்குள்

போதையேறிய பாசத்தில்
கொட்டித்தீர்ப்பார்கள்
ஒவ்வொருவரின் அந்தரங்களையும்

பிறகொரு நாள் கூடலாம் என
போதையோடு பிரிந்து
விடைபெறுவார்கள் ஒவ்வொருவரும்
தீர்ந்து போன அந்தரங்கங்களை
மறுபடியும் சேகரிக்க!

Wednesday, August 23, 2006

நான், மற்றும் என் காதல்...

எச்சில் தொட்டு
நீ அழித்த சிலேட்டின்
அ'ன்னா.. ஆ'வன்னா.. நான்
என்றாலும்
உன் சிலேட்டு அழிக்க
பறித்துக் கொடுத்த
கோவைத்தழையின்
ஈர கசகசப்போடு இருக்கிறது,
அரிச்சுவடி நாட்களின் காதல்..

......
அடுக்குப் பானையிலிருந்து
நீ எடுத்து வரும்
'மாவடு' வின் உவர்ப்பு நான்
என்றாலும்
உனக்காக திருடிய
மாங்காயில் கசியும்
பாலின் பிசுபிசுப்போடு இருக்கிறது..
பாவடை சட்டை நாட்களின் காதல்....

........
நீ பொறுக்கி எடுத்து வரும்
புளியம் பழத்தின்
உடைபடும் ஓடு நான்
என்றாலும்
செட்டியார் கடையில்
புளியம் பழம் கொடுத்து
உனக்காக வாங்கிய
அச்சு வெள்ள இனிப்பின் நசநசப்போடு
இருக்கிறது
உயர்நிலைப்பள்ளி நாட்களின் காதல்....

..............தொடரும்.........

Monday, August 21, 2006

வலைப்பதிவர் சுற்றுலா - 1

சுதந்திர தினத்தன்று, T நகர் நடேசன் பார்க்கில், முன்னறிவுப்பு ஏதுமில்லாத ஒரு வலைப்பதிவர் சந்திப்பு. அதைத்தொடர்ந்து மகாபலிபுரம் வரை ஒரு சின்ன சுற்றுலா. சிங்.செயகுமார் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்ததால், அவர் பார்க்க விரும்பி சிலரைத் தொடர்புகொள்ள, அது ஒன்பதுபேர்(நான், அருள் குமார், பாலபாரதி, மதுமிதா, சிங். செயகுமார், ப்ரியன், குப்புசாமி செல்லமுத்து, ஜெய்சங்கர் மற்றும் மா. சிவகுமார்) கொண்ட ஒரு சந்திப்பாக நிகழ்ந்தது.

நானும் அருளும் முதலில் பூங்காவிற்கு வந்து சேர்ந்தோம். எங்கு உட்காரலாம் என்று சுற்ருகையில் குப்புசாமியிடமிருந்து அருளுக்கு போன் வந்தது. உள்ளதான் இருக்கோம் வாங்க என்றான். குப்புசாமி வந்ததும் எனக்கு அறிமுகப்படுத்தினான். என்னையும் அவருக்கு...

பிறகு ஜெயகுமாரிடமிருந்து ஒரு போன் வந்தது. மதுமிதா பூங்காவிற்கு வந்துவிட்டார்கள் என்றும், அவங்களே உங்களை கண்டுபிடித்துவிடுவார்கள் என்றும் சொன்னார். எப்படி அவர்களே கண்டுபிடிக்க முடியும் என்று எனக்குள்ளே கேட்டபடி, பூங்காவைச் சுற்றிவிட்டு வாசலுக்கு வந்தோம். வாசலிலிருந்தபடி உள்ளேயும் வெளியேயும் பார்வைக்கெட்டியவரை மதுமிதா அவர்களைத் தேடினோம். எங்களை உள்ளே தேடிக்கொண்டிருந்த மதுமிதா கண்களில் பட, அவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தபடி உள்ளே சென்றோம். அவரும் அதே நோக்கத்தோடு எங்களை நோக்கி வர, முகங்களே எங்களை எங்களுக்குள் பேசிக்கொள்ச் செய்தது.

"மதுமிதா நீங்கதானே..." என்று அருள் முடிப்பதற்குள் அவர்கள் ஆமோதிக்க, எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அப்போதே ஜெய்ஷங்கரும் உள்ளே வந்தார். வந்ததும் வராததுமாய், சுதந்திர தின வாழ்த்து சொல்லி, ஆளுக்கொரு தேசியக்கொடியை கொடுத்து அணிந்துகொள்ளச்சொன்னார். "நாம் இந்திய மக்கள்" எழுதுபவராயிற்றே...!

பிறகு நாங்கள் ஐவரும் உட்கார்ந்து பேச இடம் தேடினோம். அவ்வளவு பெரிய பார்க்கில், ஒரு பத்து பேர் உட்கார்ந்து பேச ஒரே இடமாக இல்லாமல் இருக்கிறதே என்ற வருத்தம் எனக்குள். முன்தினம் மழை பெய்திருந்ததால் புல் தரையெங்கும் ஈரமாய் இருந்தது. எனினும் மதுமிதா ஒரு நல்ல இடத்தைச் சொன்னார். ஒரு கூடாரத்தில், சுற்றிலும் அமர்ந்து பேச வசதியாக சிமெண்ட் பெஞ்ச் இருந்தது. நாங்கள் போய் உட்கார்ந்து பேச ஆரம்பித்ததும் ஏற்க்கனவே அங்கு தூங்கிக்கொண்டிருந்தவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள்.

மதுமிதா, தான் விரைவில் கொண்டுவரவிருக்கும் "வலை பூங்கா ஓர் அறிமுகம்" நூலைப்பற்றி சொன்னார். பேச ஆரம்பித்ததும் ப்ரியன் வந்தார். பிறகு சிங். ஜெயகுமார் தன் நண்பர் கண்ணனுடன் வந்தார். இதற்குள் அருள் சிவகுமாருக்கு போன் செய்து நாங்கள் நடேசன் பூங்காவைல் கூடியிருக்கிறோம் வாருங்கள் என்று அழைத்துவிட்டு பாலபாரதிக்கு போன் செய்தான். வழக்கம் போல "தோ வந்துட்டேன் தல..." என்று சொல்லியிருக்கலாம் அவர்! அருள் எனக்கு மட்டும் கேட்கும்படி இப்போதான் வீட்டை விட்டு கிளம்பறாரு என்றான். பின் குப்புசாமி பக்கம் சென்றது பேச்சு. குப்புசாமியை யாருக்கு அறிமுகப்படுத்த்னினாலும் "ஓ.. நீங்கதானா அது..." என்று அவரின் புகழ்பெற்ற கதையொன்றை நினைவுகூர்ந்தார்கள்!

மதுமிதா தன் முந்தைய நூல்களை ஜெயகுமாருக்கு அன்பளிப்பாக தருவதற்காக எடுத்து வந்திருந்தார். அதை வாங்கி நாங்கள் அனைவரும் ஒரு புரட்டு புரட்டினோம். தன் புத்தகங்கள் பற்றியும், பதிப்பங்களுடனான தன் பனுபவங்களையும் மதுமிதா பகிர்ந்துகொண்டார். மதுமிதாவிடமிருந்து புத்தங்களை அன்பளிப்பாக ஜெஉஅகுமார் பெற்றுக்கொள்ள, பல பெண் கவிஞர்கள் பற்றி மதுமிதாவிடம் நாங்கள் பேசினோம். மாலதி மைத்ரி, லீனா மணிமேகலை, இளம்பிறை... இவர்கள் பற்றியெல்லாம் பேச்சு நீண்டது.

ப்ரியன், கவிதைகள் மீதான தன் ஈடுபாட்டைச் சொல்லிக்கொண்டிருந்தபோது மா. சிவகுமார் வந்தார். அருள் அவரை அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தான்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை சுவாரஸ்யமாக கவனித்த, வாக்கிங் வந்த ஒரு ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர், எங்களோடு உரையாட ஆரம்பித்த அனுபவத்தை சிவகுமாருக்கு விளக்கிய மதுமிதா, அவருக்கும் ஒரி வலைப்பூ ஆரம்பித்துவைக்க உதவும்படி சொன்னார்.

சரியாக அந்த நேரத்தில் பால பாரதி வந்து சேர்ந்தார். கையில் ஒரு கருப்புக் குடை. கையெடுத்து அரசியல் வாதி போல் கும்பிட்டபடி, "தாமதத்துக்கு எல்லோரும் என்ன மன்னிக்கணும்..." என்று ஆரம்பித்து, தனது கருத்துக்களை பிய்த்து உதரினார். அதற்குப்பின் பெரும்பாலும் அவர்தான் பேசிக்கொண்டேயிருந்தார்!

குப்புசாமியின் கதை பற்றித்துவங்கி, பாலகுமாரன், சுஜாதா, குங்குமத்தில் வலைப்பதிவாளர்களை எழுதவைப்பது என்று தனது கருத்துக்களை அவருக்கே உரித்தான பாணியில் சொல்ல, கூட்டம் கலை கட்டியது. அனைவரும் பேசி முடித்த தருவாயில், ஒரு சின்ன ப்ளாஸ்டிக் டப்பாவில் மதுமிதா கொண்டுவந்திருந்த வேர் கடலைகளையும், சப்போட்டா பழங்களையும் பகிர்ந்து சாப்பிட்டு முடிக்க, மதுமிதா கிளம்பினார். விடுமுறைதானே என்று நாங்கள் அனைவரும் மகாபலிபுரம் போகலாம் என முடிவெடுக்க, ப்ரியன் மட்டும் வரமுடியாது என்று சொல்லிவிட்டார். தன் காதல் கவிதைகளுக்கான அனுபவங்களைச் சேகரிக்கும் பணி இன்று தனக்கு இருப்பதாய் சொன்னதால் நாங்களும் அவரை வர்புறுத்தவில்லை :)

மகாபலிபுரம் செல்ல இன்னொரு வாகனம் தேவைப்பட நானும் அருளும் எடுத்துவர சென்றுவிட்டோம். நாங்கள் வரும்வரை நண்பர்கள் திருப்பதி தேவஸ்தானம் கோயில் அருகே பேசிக்கொண்டிருப்பதாய் சொன்னார்கள்.

அங்கு அவரகள் என்ன பேசினார்கள் என்று இனி ப்ரியன் சொல்வார்...

Monday, August 14, 2006

பழைய கள்ளும்.....புளிச்ச மோரும்......

ஈர ஆறு
கால்பதிக்க மனசில்லை
கிளிஞ்சலின் கோலம்.

.........

கருவேலங்காடு
முள்ளு பொறுக்கும் சிறுமி
கையில் கத்தி..

மெரினா பீச்சும். கன்றாவி காதலும்...

சிந்திக் கிடக்கின்ற பூக்களிலும்
உடைந்து கிடக்கின்ற
வளையல் துண்டுகளிலும்
மனசு நிரம்பும் காமத்தில்.....

திரும்புகின்ற இடத்தில் எல்லாம்
உதட்டு முத்தம்,
முடி கோதல்,
விரல்கள் சேரல்.....

தனிமையில் கடலை வேடிக்கை
பார்க்கப் போனால்
காம வேடனாகிப் போகிறது
மனசு...

இயலாமையை
மணல் கிளறி
தூற்றியபடி சொல்ல
வேண்டியிருக்கிறது

வக்காளி இனி பீச் பக்கம்
தனியாவே வரக்கூடாது....
.........
.........
.........